பா.ம.க. அதிருப்தி எம்.எல்.ஏ. திடீர் "பல்டி"
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியில் மனிதத்தன்மையற்ற முறையில் தான் நடத்தப்பட்டதாக கூறி, தனித்து செயல்படப்போவதாக அறிவித்திருந்த வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன், இப்போது பாமகவிலேயே தான்செயல்படப் போவதாக கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த தலித் பிரமுகரான முருகவேல்ராஜன், பாமகவில் இணைந்து வந்தவாசி தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தனக்கு கட்சியில் மரியாதை இல்லை என்றும், மனிதத் தன்மையே இல்லாமல் தான் நடத்தப்படுவதாகவும் கூறிசமீபத்தில் அவர் பரபரப்பான அறிக்கை விட்டார். தான் இனிமேல் சட்டசபையில் தனித்தே செயல்படப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு நேற்று திடீரென்று முருகவேல்ராஜன் சென்றார்.
அவருடன் நீண்ட நேரம் பேசிய பிறகு வெளியில் வந்த முருகவேல்ராஜன், தான் பாமகவிலேயே நீடிப்பதாகவும்,தனக்கு சில பிரச்சினைகள் இருந்ததாகவும், அதை ராமதாஸ் தீர்த்து விட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு மேல்எதையும் கூற அவர் மறுத்து விட்டார்.
முருகவேல்ராஜனின் இந்த திடீர் பல்டி பாமகவினருக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் சிவகாமி வின்சென்ட் எம்.எல்.ஏ மட்டுமே அதிருப்தி பாமக எம்.எல்.ஏவாக உள்ளார்.அவரையும் சீக்கிரமே சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் பாமகவினர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications