விஜிலென்ஸ் கமிஷனராக பதவியேற்றார் சங்கர்
டெல்லி:
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் தற்போதைய திட்டக் கமிஷன் செயலாளருமான பி. சங்கர்இன்று மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை (விஜிலென்ஸ்) கமிஷனராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சங்கருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சங்கருக்கு முன் விஜிலென்ஸ் கமிஷனராக இருந்த என். விட்டல்லின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து இன்று விஜிலென்ஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குஇந்தப் பதவியில் நீடிப்பார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர்அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர்பதவியை சங்கர் சமீபத்தில் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவரை மத்திய திட்டக் கமிஷனின் செயலாளராக மத்திய அரசு நியமித்தது.












Click it and Unblock the Notifications