உசிலம்பட்டியில் ஒரு "ஏ" டீச்சர்!
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊராட்சிப் பள்ளி ஆசிரியை ஒருவர் ஆபாசமாக பாடம் எடுத்தததாக மாணவிகள் புகார்கூறியதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.
ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப் பள்ளியில் தமிழ்ச் செல்வி என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் பாடம் எடுக்கும்போது மிகஆபாசமாகப் பேசுவது வழக்கமாம். இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் கூறி வந்தனர்.
இதையடுத்து பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியையிடம் இதுகுறித்துப் புகார் கூறினர்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியையின் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வேறு ஆசிரியையின் வகுப்புக்கு மாற்றி தலைமைஆசிரியை உத்தரவிட்டார். இது தமிழ்ச்செல்விக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
மாணவிகள் மாற்றப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியையிடம் சென்று இதுதொடர்பாக தகராறு செய்துள்ளார். இது பின்னர் கைகலப்பில்முடிந்தது. இரு ஆசிரியைகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
நிலைமை மோசமானதை உணர்ந்த பெற்றோர்களும், பிற ஆசியர்களும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் சென்று புகார் கொடுத்தனர். அந்தப்புகாரின் அடிப்படையில் ஆசிரியை தமிழ்ச் செல்வி இடை நீக்கம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications