தண்ணீர் விட்டதை வெளியில் சொல்லாத கர்நாடகம்
பெங்களூர்:
தமிழகத்துக்கு தனது கபினி அணைக்கட்டில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டாலும் கூட அது குறித்து கர்நாடக அரசின் சார்பில் இதுவரைஎந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அறிவிப்பு வெளியானால் பிரச்சனை வெடிக்கும் என்பதால் நள்ளிரவில் தண்ணீரைத் திறந்து விட்டுவிட்டு அமைதி காத்து வருகிறதுகர்நாடகம்.
ஆனால், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் போவதைப் பார்த்துவிட்டு மாண்டியா பகுதியில் விவசாயிகள் அரசுக்கு எதிராக பலஇடங்களில் இன்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் தடுக்க தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.
பன்னீரின் மறுப்பு:
இந் நிலையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெறும் என்று தான் சொல்லியதாக வந்துள்ள செய்திக்கு பொதுப்பணித்துறை அமைச்சர்ஓ.பன்னீர் செல்வம் மறுப்புதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டில், தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு வந்த போது நான் செய்தியாளர்களுக்கு கொடுத்தபேட்டியின்போது, வருகிற 15ம் தேதிக்குள் ஆணையக் கூட்டம் கூட்டப்படலாம் என்று தெரிவித்திருந்தேன்.
ஆனால் 15ம் தேதியன்று ஆணையக் கூட்டம் நடைபெறும் என்று நான் சொல்லியதாக செய்தி வந்துள்ளது. இதை மறுக்கிறேன் என்று கூறியுள்ளார்பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications