வீரப்பன் தமிழக காட்டில் இல்லை: அதிரடிப்படை
சத்தியமங்கமலம்:
தமிழக எல்லைப் பகுதியில் வீரப்பன் இல்லை என்று அதிரடிப்படையின் கூடுதல் டிஜிபி நடராஜன் தெரிவித்தார்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளைமேற்பார்வையிடுவதற்காக சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு நடராஜன் சென்றார். அதிரடிப்படை முகாம்களைநேரில் சென்று பார்த்தார். மலைப் பகுதி கிராம மக்களிடம் சென்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக வனப் பகுதியில் வீரப்பன் இல்லை. தமிழக காட்டுப்பகுதியின் எல்லையில் நமது அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வீரப்பன் வெளியே வர முயன்றால் கண்டிப்பாக பிடிபடுவான். அவனைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளோம்.வீரப்பனை பிடிக்காமல் ஓய மாட்டோம் என்றார்.
கர்நாடகம் நம்பிக்கை:
இதற்கிடையே நாகப்பா கடத்தப்பட்டு 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், வீரப்பனிடம் இருந்து எந்தவிதமான தகவலும் இல்லாததால் கர்நாடகம்கலங்கிப் போயுள்ளது.
ஆனாலும் நாகப்பாவை வீரப்பன் விடுவித்துவிடுவான் என்ற நம்பிக்கை இருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கைதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications