For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நள்ளிரவில் தண்ணீர் விட்ட கர்நாடகம்

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி காவிரியாற்றிலிருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநில அரசுநேற்றிரவு 1.20 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு வரும் வரை தாற்காலிக அடிப்படையில், தமிழகத்திற்கு தினசரி 1.25டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி நேற்று (புதன்கிழமை) இரவு 11.15 மணியளவில் கர்நாடகாவின் கபினி அணைக் கட்டிலிருந்து நீரைத்திறந்துவிட ஆரம்பித்தது கர்நாடகம்.

கபினி அணைக்கட்டில் இருந்து....

இந்த அணைக் கட்டில் இப்போது 22.84 அடி மட்டத்துக்கு தண்ணீர் உள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 24 மணி நேரம் தொடர்ந்து இதே அளவு நீர் திறந்துவிடப்பட்டால்தமிழகத்துக்கு 1.20 டிஎம்சி அதாவது 120 கோடி கன அடி நீர் வந்து சேரும்.

கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து திட்டமிடபடி வெள்ளிக்கிழமை, சம்பாசாகுபடி விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். யார் யாரோ எவ்வளவோ கூறியும் அசையாத கர்நாடகம், கோர்ட் தீர்ப்பையாவது மதித்துதண்ணீரைத் திறந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X