கொடுத்து வைத்த நெல்லை.. சோகத்தில் தூத்துக்குடி
சென்னை:
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் இயல்பை விட 91 சதவீதம் கூடுதலாக மழைபெய்துள்ளது.
அதே நேரத்தில் அருகில் உள்ள தூத்துக்குடியில் வழக்கத்தைவிட 82 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் எஸ்.வி.ரமணன் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் மழைப் பொழிவு குறைவாகவே இருந்தது.
சிவகங்கை, நெல்லை, தேனி,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் வழக்கத்தை விடகூடுதலாக மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்ததைவிட சிவகங்கையில் 76 சதவீதமும்,நெல்லையில் 91 சதவீதமும், தேனியில் 40 சதவீதமும், நீலகிரியில் 35 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது.
ஆனால், தூத்துக்குடியில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்ததைவிட குறைவாகவே மழைப் பொழிவு இருந்தது. இந்த மழை அளவுகடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட 82 சதவீதம் குறைவாகும் என்றார்.