உதவி கலெக்டர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்: லஞசம் வாங்கி சேர்த்தது
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள அனுமதி தர லாரிக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் இரவோடுஇரவாக கைது செய்யப்பட்டார்.
அவரது திருச்சி வீட்டில் நடந்தப்பட்ட ரெய்டில் ரூ 3 லட்சம் பிடிபட்டது.
தமிழகம் முழுவதும் உரிய லைசென்ஸ் பெறாமல் ஆறுகளில் மணலை அள்ளி கோடிகளைக் குவித்து வருகின்றனர் பல தொழிலதிபர்களும்அரசியல்வாதிகளும். இதைத் தடுத்த வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகளை பணத்தாலும் அதிகாரத்தாலும் விலைக்கு வாங்கிவருகின்றனர்.
எப்போதாவது பெயருக்கு ஏதாவது ஒரு லாரியைப் பிடித்து பைன் போடுவது வழக்கம். இந்த மணல் திருட்டில் வருவாய்த்துறையினருக்குமட்டுமல்லாமல் அந்தப் பகுதி போலீசாருக்கும் கணிசமான தொகை போய்விடுகிறது.
குறிப்பாக இரவுகளில் தான் தமிழகத்தின் ஆறுகளில் இந்த லைசென்ஸ் பெறாத அரைபாடி லாரிகள் மண்ணைத் திருடி வருகின்றன.
இந் நிலையில் தமிழகம் முழுவதுமே லஞ்ச-ஒழிப்புத்துறை ஆங்காங்கே லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைப் பிடித்து வருகிறது. இதில் காசுவாங்கிக் கொண்டு மணல் அள்ள லாரிகளுக்கு அனுமதி தந்த ஒரு உதவி கலெக்டரும் பிடிபட்டுள்ளார்.
திருநெல்வேலியில் உதவி கலெக்டராக இருப்பவர் விக்டர் ரோஸ். தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு லாரியைமடக்கிய இவர் வழக்குப் போடப் போவதாக மிரட்டியுள்ளார்.
மேலும் லாரியையும் கைப்பற்றப் போவதாக மிரட்டிய இவர் தனக்கு ரூ. 1 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகக் கூறினார்.
இதையடுத்து அந்த லாரியின் உரிமையாளரான கல்குவாரி அதிபர் ஓடிவந்தார். அவர் பேரம் பேசி இந்த லஞ்சத்தை 90,000 ஆகக்குறைத்தார்.
பணத்தை தனது திருச்சி வீட்டில் வந்து கொடுக்குமாறு விக்டர் ரோஸ் கூறிவிட்டுச் சென்றார். ந்த விவரம் லஞ்ச-ஒழிப்புப் போலீசாருக்குத்தெரியவந்தது. விக்டர் சொன்னது போலவே அந்த லாரியின் உரிமையாளர் திருச்சிக்கு வந்து பணத்தைத் தந்துவிட்டுச் சென்றார்.
இதையடுத்து விக்டரின் திருச்சி கருமண்டபம் ஆல்பா நகர் வீட்டை தொடர்ந்து நோட்டம் விட்டு வந்த திருநெல்வேலி லஞ்ச-ஒழிப்புப் பிரிவுபோலீசார் இரவோடு இரவாக அவரது வீட்டில் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் இல்லாத ரூ. 3 லட்சம் பணம் இருந்தது.மேலும் பல சொத்துக்களையும் இவர் குவித்துள்ளதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-->
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications