For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேயர் தேர்தல்: திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் அக்டோபரில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது திமுகசார்பில் பரிதி இளம்வழுதி நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

சென்னை மாநகர மேயராக இருந்த ஸ்டாலினின் பதவி, ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டது.இதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கில் ஸ்டாலின் பதவி பறிப்பு செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இருப்பினும், சென்னை மாநகராட்சி சட்டப்படி ஸ்டாலின் இரண்டாவது முறையாக மேயர் பதவி வகித்ததும்செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதனால் மீண்டும் மேயராகும் வாய்ப்பு ஸ்டாலினுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இப்போது அப்பதவி காலியாக உள்ளது.

உள்ளாட்சிப் பதவிகளில் காலியாகும் பதவிகளுக்கு ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுவழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் தான் இது போன்ற ஒரு தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

இனி அடுதத தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. அப்போது சென்னை மாநகராட்சியின் மேயர்பதவிக்கும் தேர்தல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மேயர் தேர்தலில் இம் முறை திமுக சார்பில் பரிதி இளம்வழுதி நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக உள்ள பரிதி சட்டசபையிலும் வெளியிலும் அரசுக்கு எதிராகப்போராடுவதில் மிகுந்த திறமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் இளைய தலைமுறைத் தலைவர்களில் மிக முக்கியமானவர்.

அதிமுக சார்பில் இப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜனே நிறுத்தப்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X