இந்தியா வழியே செல்ல பாலசிங்கத்துக்கு அனுமதி கிடைக்குமா?
கொழும்பு:
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம் இந்தியா வழியாக இலங்கை செல்ல அனுமதி தர வேண்டும் என நார்வே நாடுமத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்தில் வரும் 16ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக ஒருமுறை வன்னி காட்டுக்குச் சென்று புலிகள் தலைவருடன்பேச்சு நடத்த ஆண்டன் பாலசிங்கம் திட்டமிட்டுள்ளார். அவர் இப்போது லண்டனில் உள்ளார்.
கொழும்பு வழியாக அவர் இலங்கை வருவதை புலிகள் விரும்பவில்லை. கடந்த முறை கடலில் தரையிறங்கும் விமானம் மூலம் தான் அவர்வட இலங்கையை அடைந்தார். ஆனால், உடல் நலமில்லாமல் இருக்கும் அவர் மிக நீண்ட தூரம் இந்த விமானத்தில் பறப்பது உகந்ததல்லஎன மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் கேரள மாநிலத்தின் ஏதாவது ஒரு விமான நிலையம் வழியாக இலங்கை செல்ல ஆண்டன் பாலசிங்கத்துக்கு அனுமதி தரவேண்டும் என இந்திய அரசுக்கு நார்வே நாடு கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications