தமிழகத்தை வாஜ்பாய் ஏமாற்றிவிட்டார்: பொன்னையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நேற்றைய காவிரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்திற்கு சாதகமாகவே பிரதமர் வாஜ்பாய் நடந்து கொண்டார் என்று அக் கூட்டத்தில்கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்பிய நிதியமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆணையக் கூட்டத்தின்போது எழுதி வைத்த அறிக்கையை பிரதமர் படித்தார். கர்நாடகத்திற்கு சாதகமாக அவர் பேசினார். அப்போது நான்எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், தமிழகத்தின் எதிர்ப்புகளை அவர் புறக்கணித்து விட்டார்.

கர்நாடகத்திற்கு மிக சாதகமாகவும், தமிழகத்தை புறக்கணிக்கும் விதமாகவும் அவர் நடந்து கொண்டு விட்டார். தினசரி 1.25 டிஎம்சிதண்ணிரை விட குறைவாக அளிப்பது சற்றும் ஏற்புடையதல்ல. சுப்ரீம் கோர்ட்டுக்குப் போவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

முன்பே தனது தீர்ப்பை கர்நாடகத்துக்கு ஆதரவாக தயார் செய்து வைத்துக் கொண்டு சும்மா பேச்சுக்கு அந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்வாஜ்பாய் என்றார் பொன்னையன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+