அமெரிக்கா புறப்பட்டார் வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாய் 5 நாள் பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

நியூயார்க்கில் ஐ.நா. சபையின் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க அவர் சென்றுள்ளார்.

சிறப்பு விமானத்தில அமெரிக்கா புறப்படும் முன் நிருபர்களிடம் பேசிய அவர், உலகில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஜனநாயக நாடுகளுக்குமுக்கிய பங்கு உண்டு.

அமெரிக்கத் தலைவர்களுடன் சர்வதேச தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்தும்பேசுவேன் என்றார்.

வாஜ்பாயுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, வெளியுறவுத்துறைச்செயலாலர் கன்வல் சிபல் உள்ளிட்டோரும் நியூயார்க் சென்றனர்.

நாளை நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய டுவின் டவர்ஸ் அருகே நடக்கும் அஞ்சலி நிகழ்ச்சியில் வாஜ்பாய் பங்கேற்கிறார்.

12ம் தேதி வாஜ்பாய் அமெரிக்க அதிபரர் புஷ்ஷை சந்திக்கிறார். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்குவதுகுறித்து புஷ்ஷிடம் அவர் வலியுறுத்துவார்.

13ம் தேதி வாஜ்பாய் ஐ.நாவில் உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா வரும் ஆப்கானிஸ்தான் பிரதமர், இலங்கைஅதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர், ஜப்பான் பிரதமர், மொரிஷியஸ் பிரதமர் ஆகியோரை வாஜ்பாய் தனியே சந்தித்துப் பேசுகிறார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+