For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு 0.8 டி.எம்.சி. தந்தால் போதும்: கர்நாடகத்துக்கு ஆதரவாக வாஜ்பாய் தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 0.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை பிரதமர்வாஜ்பாய் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தமிழகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர தமிழகம் திட்டமிட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடக்கும் வரை தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீர்தருமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தக் கூட்டத்தை உடனே கூட்டச் சொல்லி கர்நாடகம் வற்புறுத்தியது. இதற்குப் பணிந்து வாஜ்பாய் நேற்று இரவுஇந்தக் கூட்டத்தைக் கூட்டினார்.

அதில் பேசிய கர்நாடக முதல்வர் தமிழகத்துக்கு 0.7 டி.எம்.சி. நீரைத் தான் தர முடியும் என்றார். தமிழகத்தில்சார்பில் பேசிய நிதியமைச்சர் பொன்னையன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தொடர்ந்து 1.25 டி.எம்.சி. தர வேண்டும்என்றார்.

ஆனால், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிரதமர் வாஜ்பாய் தமிழகத்துக்கு தினமும் 0.8 டி.எம்.சி. தண்ணீர்தருமாறு உத்தரவிட்டார்.

பிரதரின் இந்தத் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த பொன்னையன் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து முதல்வர்ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு பேசினார்.

பிரதமரின் தீர்ப்பு நியாயமில்லாதது என்றும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல்செய்வோம் என்றும் ஜெயலலிதா அவரிடம் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்தக் கருத்தை காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம்பொன்னையன் தெரிவித்துவிட்டு வெளியேறினார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X