பிகார் ரயில் விபத்து எதிரொலி: தமிழக ரயில் பாலங்களை பரிசோதிக்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள 20,000 ரயில் பாலங்களை ஆய்வு செய்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்தியரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
பிகாரில் விபத்தில் சிக்கிய ரயிலை நேரில் பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்பிய மூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
பிகார் ரயில் விபத்தில் இதுவரை 105 பேர் இறந்துள்ளனர். 209 பேர் காயமடைந்துள்ளனர்.
பிகார் விபத்தைத் தொடர்ந்து தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள அனைத்து ரயில் பாலங்களையும் பரிசோதித்து,அதன் தன்மை குறித்து ஆராயவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலங்களில் 13 பாலங்கள் பழுதடைந்திருப்பதாக ரயிலவேக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சரிசெய்ய விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் மூர்த்தி.
-->












Click it and Unblock the Notifications