கோவை குண்டு வெடிப்பு வழக்கு: மதானிக்கு பரோல் நிராகரிப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குடியரசுக் கட்சித்தலைவரான அப்துல் நாசர் மதானியை பரோலில் வெளியில் அனுப்ப நீதிமன்றம் மறுத்து விட்டது.
மதானியின் பாட்டி கேரளாவில் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தன்னைப் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் இரண்டாவது கூடுதல்நீதிமன்றத்தில் மதானி மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை இன்று இந்த நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் முடிவில் மதானியை பரோலில் வெளியேஅனுப்ப முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோயம்புத்தூரில் கடந்த 1998ம் ஆண்டு சுமார் 60 பேரின் உயிரைக் குடித்த குண்டு வெடிப்பு வழக்கில் மதானிஉள்பட 168 பேர் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.