தமிழகத்தில் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னை:
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துரையின் 94-வது பிறந்த நாளை திமுகவினரும், அதிமுகவினரும்வழக்கமான பெரும் உற்சாகத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார். அவருடன்அமைச்சர்களும், சபாநாயகர் காளிமுத்துவும் சென்றிருந்தனர்.
அப்போது அண்ணா குறித்த பிறந்த நாள் மவர் ஒன்றை ஜெயலலிதா வெளியிட அதை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையே வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மாலைஅணிவித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி மற்றும் முன்னாள் சென்னைமாநகர மேயர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்நிலையில் திக தலைவரான வீரமணி, மதிமுக அவைத்தலைவர் எல். கணேசன் உள்ளிட்ட பல்வேறுதலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே பெரியார் ஈ.வெ. ராமசாமியின் பிறந்த நாளும் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்கொண்டாடப்பட்டது.
-->