சென்னை தீ விபத்தில் கருகியவர் பலி
சென்னை:
சென்னை பாரிமுனையில் பைல் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கிக் கருகிய ஒருவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
பாரினையில் உள்ள பைல் தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். தீயில் சிக்கிய மூன்று பேர்பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வந்தது.
தீ அணைக்கப்பட்ட நலையில் கட்டிடத்திற்குள் ஏற்பட்ட இடிபாடுகள், சேதமான பொருட்கள் அகற்றும் பணி இன்றுநடந்தது.
அப்போது பஷீர் என்பவர் உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பஷீர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீயினால் பாதிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்ந்து சேதங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
-->