சோழவந்தானில் மாபெரும் கொள்ளை: 560 பவுன் நகைகள் திருட்டு
சோழவந்தான்:
மதுரை அருகே உள்ள சோழவந்தானில் அடகுக் கடை ஒன்றில் மிகப் பெரிய கொள்ளை நடந்துள்ளது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவர் சோழந்தான் தெற்கு ரத வீதியில் அடகுக் கடைவைத்துள்ளார்.
அதிகாலை அங்கு வேனில் ஒரு கும்பல் வந்துள்ளது. கடையின் முன் பகுதியில் வேனை நிறுத்திக் கொண்டனர்.பின்னர் டயர்களை மாற்றுவது போல நடித்து யாருக்கும் தெரியாத வகையில் கடையின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.
கடைக்குள் இருந்த ரூ. 27.5 லட்சம் மதிப்புள்ள 560 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்ட அக் கும்பல்அந்த வேனிலேயே தப்பிவிட்டனர்.
காலையில் கடையைத் திறக்க சிதம்பரநாதன் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளைஅடிக்கப்பட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரித்தபோது பலரும் ஒரு வேன் கடை முன் நின்றிருந்ததைப் பார்த்ததாகக் கூறினர்.
மிகப் பெரிய இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுதிண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களுக்கு விரைந்துள்ளனர்.