ஜெயாவிடம் போட்டி போட்டு மனு கொடுத்த ஆண்டிப்பட்டி மக்கள்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களிடம்சிறிது நேரம் மனுக்கள் வாங்கினார்.
நேற்று ஆண்டிப்பட்டிக்கு சென்ற ஜெயலலிதா அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல்நாட்டி வைத்தும் பேசினார். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.
பெண் காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் காவல்நிலையத்தைச் சுற்றிப் பார்த்தார். அதன் பிறகு வெளியே வந்த அவர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானபொதுமக்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்தார்.
அவர்களை நோக்கி நடந்தவாறே கைகளை ஆட்டி புன்னகையுடன் அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். பிறகு பொதுமக்களிடம் சிறிது நேரம் மனுக்களை வாங்கினார். போட்டி போட்டுக் கொண்டுஅவர்களும் மனுக்களை வழங்கினார்கள்.
கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க போலீஸாரும், ஜெயலலிதாவின் கருப்புப் பூனைப் படையினரும் பெரும்பாடு பட்டனர்.
பின்னர் மாலை 6 மணியளவில் ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு தேனி சென்றார். அங்கிருந்து மதுரைக்குஹெலிகாப்டரில் சென்றார். பின்னர் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
-->












Click it and Unblock the Notifications