For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளிருப்பு போராட்டத்தில் அரசுக் கல்லூரி மாணவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசுக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் கோயம்புத்தூரில்மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுள் அமர்ந்து கொண்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

அரசுக் கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தங்களது கோரிக்கைநிறைவேறும் வரை வகுப்புகளுக்குச் செல்லப் போவதில்லை என்று மாணவ-மாணவிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்ட போது, ஓரளவு மாணவர்களே வகுப்புகளுக்குவந்திருந்தனர். பெரும்ாலானாவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமையும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம்அரசினர் கல்லூரி, வியாசர்பாடி அரசுக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளுக்குப் போகாமல்கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம நடத்தினர்.

அதே போல கோயம்புத்தூரில் உள்ள மகளிர் மற்றும் ஆடவர் கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப்புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X