நெடுமாறனின் சகா "பொடா"வில் கைது
மானாமதுரை:
தமிழர் தேசிய இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான கே. பரந்தாமனை க்யூ பிராஞ்ச் போலீசார்மானாமதுரையில் இன்று காலை கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்டு 20ம் தேதி சென்னையில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் விடுதலைப்புலிகளைஆதரித்துப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பரந்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் பரந்தாமனின் மகன், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராமத் தலைவர் ஆகியோர் முன்னிலையில்அவருடைய வீடு முழுவதும் போலீசார் சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடத்தினர். துணை போலீஸ்கமிஷனர் துரைராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது.
சோதனையின் போது, பொடா சட்டத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்காடுவதற்காக வசூலிக்கப்பட்டபணத்திற்கான ரசீதுகளை போலீசார் கைப்பற்றினர்.
ஆஇதையடுத்து சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக பரந்தாமன்அங்கு கொண்டு செல்லப்பட்டார்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர்ஏற்கனவே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications