கேரளாவுக்குக் கடத்தப்படவிருந்த 10 தமிழ் சிறுமிகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கேரளாவில் வீட்டு வேலைக்காக கடத்திச் செல்லப்படவிருந்த 10 சிறுமிகளைகோயம்புத்தூரில் போலீஸார் மீட்டனர். அவர்களை அழைத்துச் சென்ற 2 பெண்களையும் போலீஸார் கைதுசெய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள குரும்பூர், மேல்மலையனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தசிறுமிகள், கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கோயம்புத்தூர் போலீஸாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து சென்னையிலிருந்து கேரளா செல்லும் ரயிலை நேற்று இரவு கோயம்புத்தூரில் நிறுத்தி போலீஸார்சோதனை செய்தனர்.

அப்போது 8 முதல் 13 வயது வரையிலான 10 சிறுமிகளை போலீஸார் பார்த்து, அவர்களை விசாரித்த போது,அவர்கள்தான் கடத்தப்படும் சிறுமிகள் என்று தெரிய வந்தது.

இதையடுத்து அந்தச் சிறுமிகளை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்களை போலீஸார்கைது செய்தனர்.

கேரளாவில் வீட்டு வேலை செய்வதற்காக இந்த சிறுமிகளை அவர்களுடைய பெற்றோரிடம் கூறி அந்தப்பெண்கள் அழைத்துச் செல்வது வழக்கமாம். இதற்கு முன்பு இதுபோல ஆறு சிறுமிகள் இதுபோல கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கேரளா செல்லும் சிறுமிகளை 6 மாதத்திற்கு ஒருமுறை அவர்களது பெற்றோர் சென்று பார்த்து சிறுமிகளுக்காகவழங்கப்படும் சம்பளத்தை வாங்கி வருவது வழக்கமாம்.

மீட்கப்பட்ட 10 சிறுமிகளும் தற்போது கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுடைய பெற்றோரிடம் விசாரித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் குஜராத்துக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த 9 தமிழ் சிறுவர்கள் ஆந்திராவின் கூடூர் ரயில் நிலையத்தில்மீட்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+