நில நடுக்கப் பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாண்டிச்சேரி அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கு 5.6 ரிக்டர்அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த மையம் ஆராய்ச்சியில் இறங்கியது. இந்த ஆய்வில் தான் இவ் விவரம்தெரியவந்தது என நிலவியல் நிபுணர் ராவல் தெரிவித்துள்ளார்.
டெக்டானிக் ட்ரிபிள் ஜக்ஷன் எனப்படும் மூன்று பெரும் நிலப் பாறைகள் சேரும் இடத்தில் பாண்டிச்சேரி அமைந்துள்ளது.இதனால் இப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.
பாண்டிச்சேரியை ஒட்டிய கடற்பகுதியில் உருவாகும் புவி காந்த அலைகளும் இதனை உறுதி செய்கின்றன என்றார் ராவல்.












Click it and Unblock the Notifications