சென்னையில் பாலிமர் சாலைகள்: மாநகராட்சி திட்டம்
சென்னை:
பிளாஸ்டிக்கின் கழிவுப் பொருளான பாலிமரைப் பயன்படுத்தி சென்னை மாநகரில் சாலைகள் போட சென்னைமாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்திற்கு அனுமதி கோரி மாநில அரசிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனரான கலைவாணன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களைக் கொட்டி வைக்கும் 2 கிட்டங்கிகள் உள்ளன. இவற்றில் சேரும்பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து கிடைக்கும் பாலிமர் கழிவை சாலைகள் போட பயன்படுத்துவது குறித்துஆராயப்பட்டுள்ளது.
இதுதொடர்பான திட்டம் தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தவுடன் நகரில் சேரும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதிலிருந்துகிடைக்கும் பாலிமரைப் பயன்படுத்தி சாலைகள் போடப்படும்.
மெட்ரோ வாட்டர் லாரிகளால் சேதமடைந்துள்ள சாலைகளில் இந்த பாலிமரைப் பயன்படுத்தி சாலை போட்டால்,நன்கு உறுதியாக இருக்கும். திட்டத்திற்கு அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் திட்டமும்துவக்கப்படும் என்றார் கலைவாணன்.
-->