அதிரடிப்படை தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படைகளின்தலைவர்கள் இன்று (புதன்கிழமை) கூடி முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
தமிழக அதிரடிப்படைத் தலைவர் கூடுதல் டிஜிபி நடராஜ், கர்நாடக அதிரடிப் படைத் தலைவர் ஜோதி பிரசாத் மிர்ஜிஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் நாகப்பாவை மீட்க தூதர்களை அனுப்பும் முடிவில் கர்நாடகம் உள்ளது.
இதனால் கர்நாடக அதிரடிப்படையினர் தங்களுடைய தேடுதல் வேட்டையைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.ஆனாலும் தமிழக அதிரடிப்படை தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்தும், வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாகவும் இரு மாநில அதிரடிப்படைத் தலைவர்களும் முக்கியஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இன்று நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள்எடுக்கப்படவுள்ளன.
-->












Click it and Unblock the Notifications