தமிழத்தில் சாப்ட்வேர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டம்
சென்னை:
தமிழக அரசின் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை)வெளியிட்டார்.
தகவல் தொழில்நுட்பத்துறையைத் தேர்ந்தெடுத்து மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இந்தப்புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற "கனெக்ட் 2002" என்ற தகவல் தொழில்நுட்பத் துவக்க விழாவின் போதுஜெயலலிதா இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்,
கிராமப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழிலேயே தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கம்ப்யூட்டர் ஆராய்ச்சிகளை நடத்தவும் இந்தப் புதியகொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் துறையில் நாட்டிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக்கும் அளவுக்கு இந்தப் புதிய தொழில்நுட்பக்கொள்கை நிச்சயம் உதவும்.
கம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்களுக்கு இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை நிச்சயம் ஒரு புதியசகாப்தத்தைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. இதன் மூலம் இத்துறையில் வேலைவாய்ப்புக்களைஅதிகரிக்கவும் புதிய கொள்கை வழி செய்கிறது.
கம்ப்யூட்டர் துறையில் தொழில் தொடங்க வரும் அனைவரையும் தமிழக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துவரவேற்கிறது என்றார் ஜெயலலிதா.
இரண்டு நாட்கள் நடக்கும் "கனெக்ட் 2002" மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்ல,அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானகம்ப்யூட்டர் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.
-->