புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பாவாணன் ஆஜர்
புதுக்கோட்டை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாவாணன் இன்று காலை புதுக்கோட்டை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார்.
புதுக்கோட்டையில் விடுதலைப்புலிகளுக்காக டீசல் மற்றும் மின்சாதனப் பொருட்களைக் கடத்தியதாக பாவாணன்மீது கடந்த 1996ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சமீபத்தில் பொடாசட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு பாவாணன் பலத்த பாதுகாப்புடன் இன்றுகொண்டுவரப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தயாளன், அக்டோபர் 1ம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்துஉத்தரவிட்டார். பாவாணனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் பாவாணன் மீண்டும் கோயம்புத்தூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.