8 வயது சிறுமியை மானபங்கம் செய்த "பெரிசு"க்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி அருகே 8 வயது சிறுமியை மானபங்கப்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள 78 வயதுதாத்தாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை நாடார். இவருக்கு வயது 78.
இவர் அதே ஊரைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் 8 வயது பேத்தியைக் கற்பழித்ததாக ஜூலை 15ம் தேதி புகார்கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ராஜதுரை நாடார் கைது செய்யப்பட்டார்.
தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், தன்னை ஜாமீனில் விடக் கோரியும் திருநெல்வேலி செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு செய்தார் ராஜதுரை நாடார்.
ஆனால் அது நிராகரிக்கப்பட்டவே, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், ராஜதுரை நாடாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications