கெட்டவார்த்தை எம்.எல்.ஏ: ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் ரவுடிகளுடன் புகுந்து கலாட்டா செய்தார் திருப்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.உமாதேவனைக் கண்டித்து இன்று இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் நாளை காரைக்குடியில் கண்டன ஊர்வலம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும் மாணவர்களும்போராட்டம் நடந்தி வருகின்றனர்.
இதையடுத்து கல்லூரிகளை எப்படியாவது திறக்க வைத்துவிட அதிமுக முயற்சித்து வருகிறது. காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியை மீண்டும் இயங்க வைக்க திருப்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏவான உமா தேவன் தனது அடியாட்களுடன் அங்குசென்றார்.
அதிமுகவினர் மற்றும் ரவுடிகளுடன் அழகப்பா கலைக் கல்லூரிக்குச் சென்றார் உமா தேவன், கல்லூரி முதல்வர் சுப்பிரமணியக்கவிராயரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
அவரைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர்.
இதையடுத்து சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதி கல்லூரி ஆசிரியர்கள் நேற்று ஆர்பாட்டம் நடத்தினர்.இன்றும் அவர்கள் சாலைகளில் நின்று உமாதேவன் மீது வழக்குத் தொடரக் கோரி போராட்டம் நடத்தினர்.
நாளை காரைக்குடியில் கண்டனப் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
-->