ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடுகிறார்: கர்நாடகம்
டெல்லி:
காவிரி விவகாரத்தை ஜெயலலிதா அரசியலாக்கி ஆதாயம் தேடுவதாக கர்நாடகம் கூறியுள்ளது.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். இருந்தாலும் எங்களுக்கு பல வகைகளிலும் நெருக்குதல்கொடுத்து வருகிறார் ஜெயலலிதா. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்.
நீதிமன்ற அவமதிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். தண்ணீர் இருந்தால் தானே தர முடியும். எங்கள் அணைகளில் நீர்நிரம்பும்போதெல்லாம் தமிழகத்துக்கு தந்து கொண்டு இருந்தோம். இப்போதுள்ள நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
விவசாயிகள் போராட்டத்தால் எங்கள் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்றார் கார்கே.
நேற்று சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதால் தான் தண்ணீரைத் தருவதை நிறுத்துவதாக கர்நாடகம் கூறியது. சட்டம் ஒழுங்கைபராமரிக்க முடியாத அரசை உடனே கலைக்க வேண்டும் என்றார் ஜெயலலிகா.
இதையடுத்து கர்நாடகம் தனது பேச்சை மாற்றிக் கொண்டுள்ளது.
கடித ஆராய்ச்சி நடத்தும் கர்நாடகம்:
தமிழகத்துக்கு மீண்டும் தண்ணீர் விடுமாறு மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள கடிதம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி ஆராய்ந்த பிறகே நடவடிக்கை எடுப்போம் என கர்நாடகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கெளடா கூறுகையில்,
டெல்லியில் நாளை கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அரசின் கடிதம் குறித்து ஆராயப்படும்.
இம் முறை எங்கள் பயிர்கள் நீருக்காக காத்துக் கொண்டுள்ளன. தமிழகம் இப்போது தான் சம்பா பயிரை பயிரிடவே போகிறது.இதனால் எங்கள் பயிர்களைத் தான் முதலில் காப்பாற்ற வேண்டும். இதனால் தான் நீரை நிறுத்தினோம். அதே நேரம் தமிழகத்தின்கடும் வறட்சியையும் கருத்தில் கொள்வோம் என்றார்.
அம்பரீஷ் தொடர்ந்து வசனம்:
இதற்கிடையே தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதை தமிழ் படங்களில் தலை காட்டி தமிழர்களின் பணத்தை ஈட்டியஅம்பரீஷ் எம்.பி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அம்பரீஷ் கூறுகையில், மாண்டியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை நாடகம் என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார். அவர தனது பதவிக்கு உரிய மரியாதையுடன் பேச வேண்டும். இந்தப் போராட்டம் உண்மையானது.உணர்ச்சிப்பூர்வமானது என்றார்.
-->












Click it and Unblock the Notifications