தமிழகத்திற்கு தண்ணீர் விட கர்நாடகத்திற்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி:
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்த பின்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி இந்தக்கடிதத்தை அனுப்பினார்.
இதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்தும், பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த காவிரி நதி நீர் மன்றத்தைமதித்தும் உடனே மீண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு இன்றுஉத்தரவிட்டுள்ளது.
இந்தக் கடிதம் இன்று கர்நாடகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் தமிழகத்துக்கு தினமும் 0.8 டி.எம்.சி.நீரை விடுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சேத்தி, கர்நாடக அரசுடன் பேசுமாறு பிரதமரிடமும் கேட்டுள்ளேன். முதலில் நீரைத்தர ஒப்புக் கொண்ட கர்நாடகம் இப்போது அதில் இருந்து பின் வாங்குவது சரியல்ல என்றார்.
முதலில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் தந்த கர்நாடகம் அதையும் இடையிடேயேநிறுத்தியது.
பின்னர் பிரதமரின் உத்தரவுப்படி 14ம் தேதி முதல் 0.8 டி.எம்.சி நீரைத் தர ஆரம்பித்த கர்நாடகம் 18ம் தேதி அதைநிறுத்திவிட்டது.
-->












Click it and Unblock the Notifications