உண்ணாவிரதம்: மயக்கமடைந்த ஆசிரியைகள் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உண்ணாவிரதம் இருந்து மயக்கமடைந்த 5 பள்ளி ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 432 ஆசிரியர்கள் சமீபத்தில் பல்வேறு இடங்களுக்கு திடீர் இடமாற்றம்செய்யப்பட்டனர். இவர்களில் 20 மலையாள ஆசிரியைகள் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த இடமாற்றங்களை எதிர்த்து நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்புஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்களில் ஐந்து ஆசிரியைகள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கோட்டாறுஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications