சென்னையில் திருட்டு விசிடிக்கள் பறிமுதல்: 2 பேர் கைது
சென்னை:
சென்னை அருகே சோளிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டுவிசிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர்.
சென்னை நகரில் திருட்டு விசிடிக்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் பாரிமுனை பகுதியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் புறநகர்ப்பகுதிகளான காரப்பாக்கம் மற்றும் சோளிங்கநல்லூர் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை)நடந்த அதிரடி சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பிடிபட்டன.
சமீபத்தில் வெளியாகிய புதிய படங்கள் மற்றும் ஆகியவற்றின் விசிடிக்கள் தான் பெரும்பாலும் சிக்கியுள்ளன.
இதுதொடர்பாக கதிரவன் மற்றும் ரகு ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். திருட்டு விசிடி தயாரிக்கப்பயன்படும் கம்ப்யூட்டரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications