கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் 3 பேர் வேட்பு மனுத்தாக்கல்
மதுரை:
உயர் ஜாதியினரின் கடும் மிரட்டல்களையும் மீறி மதுரை மாவட்டம் கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துத் தலைவர்பதவிக்கு கட்டராமன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம் ஆகிய தனித் தொகுதி கிராமப் பஞ்சாயத்துகளுக்குகடந்த சில ஆண்டுகளே உள்ளாட்சித் தேர்தலே நடத்த முடியாமல் இருந்தது.
அங்குள்ள உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து வந்ததால்இந்த நிலை.
இந் நிலையில், சில மாதங்களுக்கு முன் அங்கு தேர்தல் நடந்தது. இருப்பினும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் அடுத்த சில நாட்களிலேயே மிரட்டல் காரணமாக பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர்.
இந் நிலையில் தற்போது 3 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 16ம் தேதி தொடங்கியது. 23ம் தேதி கடைசி நாளாகும்.
கீரிப்பட்டியில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கட்டராமன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். கிராம மக்கள்சார்பில் அவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, பாப்பாப்பட்டியில் சின்னயன் மற்றும் சடையாண்டி ஆகிய இருவரும் வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளனர். நாட்டார் மங்கலத்தில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
-->












Click it and Unblock the Notifications