நெடுமாறனுடன் சுகுமாறன், கல்யாணி சந்திப்பு
கடலூர்:
வீரப்பன் விவகாரத்தை சமூக, பொருளாதார கண்ணோட்டத்துடன் அனுக வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவரை சுகுமாறன் மற்றும் பேராசிரியர் கல்யாணி ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில்சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நெடுமாறனை சந்தித்தபோது கடந்த முறை ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடக அரசு கொடுத்தஉறுதிமொழிகள் நிறைவேற்றப்படாதது குறித்துக் குறிப்பிட்டார்.
குறிப்பாக கர்நாடக அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 10 கோடிகொடுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார்.
வீரப்பன் பிரச்சினையை சமூகப் பொருளாதார கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்பதையும் நெடுமாறன்குறிப்பிட்டார்.
இரு மாநில அரசுகளும் ராஜ்குமார் மீட்பின்போது கொடுத்த உறுதிமொழியை இப்போதும் கொடுத்தால்தான்நாகப்பாவை மீட்க செல்வோம். அதேபோல, கொளத்தூர் மணியைக் கைது செய்தது குறித்து சிபிஐ விசாரணைநடத்த வேண்டும்.
இதையும் ஒரு நிபந்தனையாக கர்நாடக அரசுக்குத் தெரிவித்துள்ளோம் என்றனர்.
-->












Click it and Unblock the Notifications