மதுரை, பெரம்பலூரில் கன மழை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பெரம்பலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் வறட்சியும், இன்னும் வெயில் குறையாமலும் உள்ள நிலையில்மதுரை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
மதுரை மாவட்டம் கப்பலூர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதேபோல பெரம்பலூரிலும் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இங்கு இடி தாக்கி 2 மாடுகள்உயிரிழந்தன. இந்த மழையினால் இங்குள்ள விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பருத்தி, சோளம், கம்பு மற்றும் நெல் பயிர்களுக்கு இந்த மழை மிகுந்த பயனளிக்கும்.
-->












Click it and Unblock the Notifications