ஆத்தூர் குண்டுவெடிப்பு: பெண் தலைமறைவு- 1.5 டன் வெடிகள் பறிமுதல்
மேட்டூர்:
21 உயிர்களை பலி வாங்கி, 25 வீடுகளைத் தரைமட்டமாக்கிய ஆத்தூர் வெடி விபத்துக்குக் காரணமான முக்கிய பெண் குற்றவாளிதலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இந்த வெடி விபத்து நடந்தது. இது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,முக்கிய குற்றவாளியான ஆராயி என்ற பெண் தலைமறைவாகிவிட்டார்.
இவரது வீட்டில் தான் வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெண் பாண்டிச்சேரியில் மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.இதையடுத்து தனி போலீஸ் படை பாண்டிச்சேரி சென்றுள்ளது. வேறு இடங்களிலும் அவரைத் தேடும் பணி நடக்கிறது.
இதற்கிடைய சேலம் மாவட்டம் முழுவதுமே வெடிகளை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க ஆட்சித்தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தீபாவளி சீட்டு பிடிப்பவர்கள், வெடிக் கடை வைப்பவர்கள்ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்தச் சோதனைகள் மேட்டூரிலும் நடந்தன. தத்தமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி என்ற ஊரில் கடந்த பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஒரு வீடும் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு 24 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் சிக்கின.இவற்றின் எடை 1.5 டன்களாகும். அந்த வெடிகளை பறிமுதல் செய்த போலீசார் வீட்டையும் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே போல இன்னொரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது வெடிகளைத் தயாரிக்க உதவும் ரசாயன பொருள்களும் கருவிகளும்சிக்கின. அவையும் பறிமுதல் செய்யப்பட்டு வீடும் சீல் வைக்கப்பட்டது.
-->
-
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம் -
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 114, திமுக 104..? IANS - Matrize வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்! -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications