ஆத்தூர் குண்டுவெடிப்பு: பெண் தலைமறைவு- 1.5 டன் வெடிகள் பறிமுதல்
மேட்டூர்:
21 உயிர்களை பலி வாங்கி, 25 வீடுகளைத் தரைமட்டமாக்கிய ஆத்தூர் வெடி விபத்துக்குக் காரணமான முக்கிய பெண் குற்றவாளிதலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இந்த வெடி விபத்து நடந்தது. இது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,முக்கிய குற்றவாளியான ஆராயி என்ற பெண் தலைமறைவாகிவிட்டார்.
இவரது வீட்டில் தான் வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெண் பாண்டிச்சேரியில் மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.இதையடுத்து தனி போலீஸ் படை பாண்டிச்சேரி சென்றுள்ளது. வேறு இடங்களிலும் அவரைத் தேடும் பணி நடக்கிறது.
இதற்கிடைய சேலம் மாவட்டம் முழுவதுமே வெடிகளை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க ஆட்சித்தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தீபாவளி சீட்டு பிடிப்பவர்கள், வெடிக் கடை வைப்பவர்கள்ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்தச் சோதனைகள் மேட்டூரிலும் நடந்தன. தத்தமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி என்ற ஊரில் கடந்த பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஒரு வீடும் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு 24 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் சிக்கின.இவற்றின் எடை 1.5 டன்களாகும். அந்த வெடிகளை பறிமுதல் செய்த போலீசார் வீட்டையும் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே போல இன்னொரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது வெடிகளைத் தயாரிக்க உதவும் ரசாயன பொருள்களும் கருவிகளும்சிக்கின. அவையும் பறிமுதல் செய்யப்பட்டு வீடும் சீல் வைக்கப்பட்டது.
-->
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications