ரேஷன் அரிசி கடத்தலைத் தடுத்த பொதுமக்கள்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்ல முயன்ற லாரியைபொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். ஆனால் அரிசியைக் கடத்திய 5 பேரும் பொதுமக்களின் தாக்குதலிலிருந்துதப்பிச் சென்றனர்.
திருப்பூர் தில்லை நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து அரிசி மூட்டைகள் லாரியில் வைத்துக்கடத்தப்படுவதாக அப்பகுதியில் செய்தி பரவியது.
இதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கானவர்கள் ரேஷன் கடைக்கு முன் திரண்டனர்.பொதுமக்களைப் பார்த்தும் லாரியில் அரிசியை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் லாரியில் ஏறி தப்ப முயன்றனர்.
உடனடியாக பொதுமக்கள் கற்களை வீசி லாரியைத் தாக்கினர். இதில் லாரியின் ஒரு பகுதி சேதமடைந்தது.இதையடுத்து லாரியை அப்படியே விட்டு விட்டு ஐந்து பேரும் தப்பிச் சென்றனர்.
போலீஸார் விரைந்து வந்து அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications