பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: வள்ளலார் தரும சாலையில் அரசு அன்னதான திட்டம் ரத்துஊட்டி மலை ரயிலின் வேகத்தை அதிகரித்துள்ள நீராவி என்ஜின்
கோயம்புத்தூர்:
மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூருக்கு இடையே மலை ரயிலின் என்ஜின் நிலக்கரியிலிருந்து நீராவிக்குமாற்றப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த என்ஜினை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்திஇன்று துவக்கி வைத்தார்.
குன்னூர் செல்லும் இந்த மலை ரயிலில் நிலக்கரியால் இயங்கும் என்ஜின் கடந்த 100 வருடங்களாகபயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தரமான நிலக்கரி கிடைப்பது கஷ்டமாக இருந்ததால் ரயிலை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது.இதையடுத்து புதிய முறையிலான என்ஜின் வடிவமைக்கப்பட்டது.
இதன்படி தயாரிக்கப்பட்ட நீராவி என்ஜின் கடந்த ஒரு வருடமாக பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டுவந்தது. அது வெற்றியடையவே இப்போது அந்த என்ஜினை முழுமையாகப் பயன்படுத்தப்பட ஆரம்பித்துள்ளனர்.
இந்த புதிய வகை என்ஜினை மூர்த்தி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய என்ஜின் மூலம் பயணநேரம் குறைவதோடு, ரயிலின் வேகமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications