தமிழக அதிகாரிகளுடன் வறட்சி நிவாரணக் குழுவினர் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களைப் பார்வையிடுவதற்காக வந்துள்ள மத்திய அரசின்வறட்சி நிவாரணக் குழுவினர் இன்று (திங்கள்கிழமை) காலை தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டஅதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைப் பார்வையிடுவதற்காக மத்திய அரசு அனுப்பியுள்ளவறட்சி நிவாரணக் குழு சென்னை வந்து சேர்ந்தது.
தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க மத்திய அரசிடம் ரூ.720 கோடி வழங்குமாறு தமிழக அரசுகோரியுள்ளது.
இதையடுத்து வறட்சி பாதித்த 19 மாவட்டங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்வதற்காக மத்தியவேளாண்மைத்துறை இணைச் செயலரான ஜோகிந்தர் சிங் தலைமையிலான எட்டு பேர் கொண்ட மத்திய குழுநேற்று இரவு சென்னை வந்தது.
இக்குழுவினர் இன்று காலை தமிழக தலைமைச் செயலாளரான சுகவனேஸ்வரர் உள்ளிட்ட அதிகாரிகளைச்சந்தித்து விவாதித்தனர். அப்போது தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி குறித்து மத்தியக் குழுவினரிடம் தமிழகஅதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
பின்னர் இக்குழுவினர் இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கின்றனர்.
அதன் பின்னர் அவர்கள் 4 குழுக்களாகப் பிரிந்து நாளை முதல் 19 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வறட்சிநிலையைப் பார்வையிடுகிறார்கள்.
இரண்டு நாட்களில் தங்கள் ஆய்வுகளை முடித்துக் கொள்ளும் அவர்கள் பின்னர் மீண்டும் சென்னை வந்து உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். அதன் பிறகு டெல்லி சென்று மத்திய அரசிடம் வறட்சி நிவாரணக்குழுவினர் அறிக்கை அளிப்பார்கள்.
-->












Click it and Unblock the Notifications