ஈவ் டீசிங்கைத் தடுப்பது எப்படி?- சென்னையில் கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈவ் டீசிங் மற்றும் ராகிங்கைத் தடுப்பது குறித்த கருத்தரங்கம் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.
சென்னை ஐ.பி.எஸ். அதிகாரிகள் விடுதியில் நடந்த இந்தக் கருத்தரங்கை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார்தொடங்கி வைத்தார்.
ஈவ் டீசிங்,ராகிங் போன்றவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் மாணவ,மாணவியர் விவாதம் செய்தனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 41 கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும்ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ராகிங் மற்றும் ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள் குறித்து ஈ-மெயில் மூலம் புகார் கொடுக்கும் வசதி விரைவில்ஏற்படுத்தப்படும் என்று அப்போது விஜயகுமார் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications