லாரியுடன் ரூ. 1 கோடி ரெடிமேட் ஆடைகளை கொள்ளையடிக்க முயற்சி: 14 பேர் கைது
சென்னை:
பெங்களூரிலிருந்து ரெடிமேட் ஆடைகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்து கொண்டிருந்த லாரியை மடக்கிக்கொள்ளையடிக்க முயன்ற 14 பேர் கும்பலைப் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் உள்ள ஒரு ரெடிமேட் ஆடை ஏற்றுமதி நிறுவனம் அமெரிக்காவுக்கு அடிக்கடி ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக நேற்றும் பெங்களூரிலிருந்து ரூ. 1 கோடி ரூபாய்மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகள் ஒரு லாரி மூலம் அனுப்பப்பட்டன.
நேற்று இரவு அந்த லாரி சென்னை-பூந்தமல்லி சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு கார் அந்தலாரியை வழிமறித்தது.
பின்னர் அந்தக் காரிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், லாரி டிரைவரைக் கத்தி முனையில் மிரட்டி லாரியோடு சேர்த்துஆடைகளைக் கொள்ளையடிக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார், இதைப் பார்த்ததும் கொள்ளையர்களைச்சுற்றி வளைத்துக் கொண்டு கொள்ளையர்களிடமிருந்து லாரி டிரைவரை மீட்டனர்.
இது தொடர்பாக 14 கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-->












Click it and Unblock the Notifications