மும்பை பங்குச் சந்தை ஸ்தம்பிப்பு: ரூபாய் மதிப்பு சரிவு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் ஆதரவுடன் பந்த் நடந்து வருகிறது. அலுவலகங்கள் இயங்காவிட்டாலும் கூட போக்குவரத்துபாதிக்கப்படவில்லை.

முன்னெச்சரிக்கையாக அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுவிட்டன. தனியார் நிறுவனங்களும்இயங்கவில்லை.

ஆனால், நகருக்குள் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்குகிறது. காலை 7.45 மணிக்கு செனட்ரல் ரயில் நிலையத்தில்தோம்பிவிலி பகுதியில் சிறிது நேரம் ரயில்களை வி.எச்.பி., சிவசேனைத் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.

ஆனால், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதையடுத்து ரயில் மறியலை அவர்கள்கைவிட்டனர்.

அதே போல மலாட், காந்திவிலியிலும் சில ரயில்களை வி.எச்.பி தொண்டர்கள் தடுத்தனர். ஆனால், அவர்களை போலீசார் தடியடிநடத்திக் கலைத்தனர்.

போரிவிலி, தாதர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரேப்பிட் ஆக்ஷன் போர்ஸ் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பேஹ்ந்தி பஜார் பகுதியில் முஸ்லீம்களின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

பந்தினால் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்மதிப்பு சிறிதளவு குறைந்தது.

சிவசேனை ஆதரவு இருந்தும் கூட பந்துக்கு முழு ஆதரவு இல்லை என மாநில அரசு கூறியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+