காவிரி பிரச்சனையை ஆண்டவன் தான் தீர்க்கணும்: பா.ஜ.க.
சென்னை:
காவிரிப் பிரச்சனையை ஆண்டவன் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் தமிழகப் பொதுச்செயலாளரான இல. கணேசன் கூறினார்.
இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
காவிரி விவகாரத்தில் இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
உச்ச நீதிமன்றத்தையும் காவிரி நதி நீர் ஆணையத்தையும் மீறும் கர்நாடகத்தின் செயல்பாடுகள்கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல, மனிதாபிமானம் இல்லாதவையும் கூட.
ஆள்பவனை விட ஆண்டவன் தான் இந்தக் காவிரிப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும். இதற்காக நாம்ஆண்டவனைப் பிரார்த்திப்போம் என்றார் கணேசன்.
அக்டோபர் 1ல் பா.ஜ.க. பேரணி:
இதற்கிடையே சென்னையில் வரும் அக்டோபர் 1ம் தேதி "பயங்கரவாத எதிர்ப்பு தின" பேரணி ஒன்றை நடத்தபா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்குவார் என்று மற்றொருதமிழக பா.ஜ.க. செயலாளரான எச். ராஜா இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையடுத்து அன்று கோயம்புத்தூரில் நடைபெறவிருந்த மாநில பா.ஜ.க. செயற்குழுக் கூட்டம் ரத்துசெய்யப்படுவதாகவும், அதற்கு மறுநாள் திட்டமிட்டபடி பா.ஜ.க. பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெறும் என்றும்அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications