போக்குவரத்து கழகங்கள் 7 ஆக குறைக்கப்படுகின்றன: விரைவில் தனியார்மயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக தமிழகத்திலுள்ள 18 போக்குவரத்துகழகங்களை 7 ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் இநதத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.

தமிழகத்தில் தற்போது 18 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றை நிர்வாக வசதிக்காகவும், போக்குவரத்துக்கழகங்களுக்கிடையே செலவீனங்களைக் குறைக்கும் விதமாககவும் 7 கழகங்களாகக் குறைக்க அரசு முடிவுசெய்தது.

இதற்கான திட்டவடிவை மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து மதுரை, கோவை, சேலம், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களைத்தலைமையிடமாகக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமும் இயங்க உள்ளன.

இத் தகவலைத் தெரிவித்த மாநில போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் போக்குவரத்துக் கழகங்களால் தற்போதுஆண்டுக்கு ரூ.2,035 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இனிமேல் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிர்ணயம்செய்யப்படும். போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்குவது தொடர்பாக உயர் மட்டக் குழு ஆய்வு செய்துவருகிறது என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+