கடலூர் அருகே மீனவர்கள் கோஷ்டி மோதல்: ஒருவர் குத்திக் கொலை
கடலூர்:
கடலூர் அருகே 2 மீனவர் குழுக்களிடையே கடுமையான கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
கடலூர் அருகே உள்ள தாழங்குடா பகுதியில் வசித்து வரும் ஏராளமான மீனவர்களுக்காக தொகுப்பு வீடுகள்விரைவில் கட்டப்படவிருந்தது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இரு மீனவர் குழுக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த இரண்டு கோஷ்டியினரும் இன்று காலை பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
ஒவ்வொரு தரப்பிலும் சுமார் 500 பேர் வீதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கத்திய, இரும்புத் தடி, வேல்,ஈட்டி உள்ளிட்ட பல பயங்கரமான ஆயுதங்களுடன் மோதினர்.
இதில் வேலு என்ற 24 வயது வாலிபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் ஏராளமான மீனவர்கள்படுகாயமடைந்தனர். அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து கடலூர் எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் தாழங்குடா பகுதியில் குவிக்கப்பட்டனர்.அப்பகுதியில தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவுகிறது.
-->












Click it and Unblock the Notifications