முதுமலையில் 2 குட்டி யானைகள் மர்ம சாவு
நீலகிரி:
முதுமலை சரணாலயப் பகுதியில் ஒரே நாளில் 2 குட்டி யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
முதுமலை சரணாலயப் பகுதியில் இரை தேடியும், குடிநீர் தேடியும் யானைகள் காட்டுக்கு வெளியே வருவதுவழக்கம். இதுபோல சில நாட்களுக்கு முன் ஒரு குட்டி யானை காட்டிலிருந்து வெளியே வந்தது.
அதைப் பார்த்த வனத்துறையினர் மீண்டும் அந்த குட்டியானையை காட்டுக்குள் அனுப்பினர். இந் நிலையில்மசினகுடி பகுதியில் ஒரு குட்டி யானை இறந்த நிலையில் கிடந்தது. அந்த குட்டி யானை தான் சில நாட்களுக்குமுன்பு காட்டுக்குள் திருப்பி விடப்பட்ட ஆண் யானைதான் என்பது தெரிய வந்தது.
அதே போல கூடலூர் பகுதியில் ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது. அதுவும் ஆண் யானைதான். அதுநோய்வாய்ப்பட்டு இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் இரண்டு குட்டி யானைகள் இறந்துள்ளது வனத்துறையினருக்கு பெரும் குழப்பத்தைஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications