முரசொலி மாறன் கவலைக்கிடம்?
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட முரசொலி மாறனுக்கு அந்த வால்வில் பூஞ்சைததொற்று ஏற்பட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சையும் நடந்தது.
அவரது இருதய வால்வில் இருந்து நோய்த் தொற்று ரத்தத்தில் பரவியுள்ளதால் டாக்டர்களை கவலையடையவைத்துள்ளது. அவருக்குசெயற்கை சுவாசம் கொடுக்கப்படவிலலை என்றாலும் கூட அதிக ஆன்டி பயாடிக்மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த மருந்துகள் அதிகம் பயனளிக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மாறனின் நிலை மேலும்மோசமடையும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-->












Click it and Unblock the Notifications