பெங்களூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட கர்நாடக விவசாயிகள்: 20 ரயில்கள் ரத்து
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி பெங்களூர் ரயில் நிலையத்தில் கர்நாடகவிவசாயிகள் இன்று மறியல் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்ப வேண்டிய 20க்கும்மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சுமார் 1,000 கர்நாடக விவசாயிகள் இன்று காலை திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காகபெங்களூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அங்கு புறப்படுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்த சில ரயில்களின் மீது ஏறி நின்று கொண்டுவிவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதை எதிர்த்தும், தமிழகத்தைத் தாக்கியும் விவசாயிகள் கோஷம் போட்டனர்.
இதையடுத்து பெங்களூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகத்திற்குச் செல்லவேண்டிய ரயில்கள் மட்டுமில்லாமல் இங்கிருந்து வேறு பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய 20க்கும் மேற்பட்டரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே தமிழகத்திலிருந்து இன்று காலை பெங்களூருக்கு வந்து சேர வேண்டிய ரயில்களும்கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பஸ், கார், ஆட்டோக்கள் மூலமேபயணிகள் பெங்களூர் வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில் கர்நாடக அரசு மீது தமிழகம் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைநாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, நீர்வளத்துறை அமைச்சர், அத்துறையின் செயலாளர், கர்நாடகஅரசு தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பதும் இதன் நகல்களை அவர்களிடம் சமீபத்தில்நேரடியாகவே வழங்கி மூக்குடைப்பு கொடுத்ததும் நினைவிருக்கலாம்.
இதற்கிடையே நாளை பிற்பகல் காவிரி கண்காணிப்புக் குழுவும் டெல்லியில் கூடவுள்ளது. ஆனால் இந்தக்கூட்டத்தில் தமிழகம் கலந்து கொள்ளாது என்று தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications