கோவையில் முஸ்லீம் பிரமுகர் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரில் இஸ்லாமிய இமாம் ஒருவரை சிலர் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கினர். இதில்அவருடைய மண்டை உடைந்தது.
கோயம்பத்தூர் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள மசூதியில் இமாமாக இருப்பவர் காஜா நிஜாமுதீன். இவர் நேற்றுமசூதியில் தொழுகை முடிந்த பின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சண்முகம் சாலையில் நிஜாமுதீன் சென்று கொண்டிருந்த போது சிலர் திடீரென்று அவரைச் சூழ்ந்து கொண்டனர்.பின்னர் அந்தக் கும்பல் நிஜாமுதீனைக் கம்புகளால் பயங்கரமாகத் தாக்கியது. இதில் நிஜாமுதீனின் மண்டைஉடைந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவர் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, நிஜாமுதீனைத் தாக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications